18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் பான் கார்டு வாங்க முடியும். பெற்றோர்களின் உதவியுடன், குழந்தைகளுக்கு பான் கார்டுகளை வாங்கலாம். இதற்கு சில முக்கியமான ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும்.
Minor PAN Card:
பான் கார்டு ஒரு முக்கியமான அரசு ஆவணமாகக் கருதப்படுகிறது. இது நிதி
பரிவர்த்தனைகளுக்கும், இன்னபிற
ஆவணங்களுக்காவும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் வங்கிக் கணக்கு தொடங்க
விரும்பினாலும் அல்லது வேறு வேலை செய்ய விரும்பினாலும், பான் கார்டு அவசியமாகும்.
கூடுதலாக, டீமேட் கணக்கைத்
திறக்கவும் இந்த அட்டை அவசியம். அடையாளச் சான்றாக பான் கார்டு மிகவும்
முக்கியமானது. பலர் பான் கார்டு பெறுவதற்கு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்று
நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை இல்லை.
18 வயதுக்குட்பட்ட சிறார்கள் அல்லது குழந்தைகளுக்கு கூட பான் கார்டு வாங்கலாம்.
குழந்தைகளுக்கு வெளிநாடு செல்ல அல்லது பள்ளிகளில் கிடைக்கும் பலன்களை அனுபவிக்க
பான் கார்டு தேவைபடுகிறது. 18 வயதுக்குட்பட்ட
குழந்தைகளுக்கான பான் அட்டையை எளிதாகப் பெறலாம். இதை எப்படி பெறுவது என்ற எளிய
வழிமுறைகளைக் குறித்து விரிவாகக் காணலாம்.
மைனர் பான் கார்டு விண்ணப்பிக்கும் முறை
18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நேரடியாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாது.
பான் கார்டுக்கு விண்ணப்பிக்க பெற்றோர் உதவி தேவைப்படும். 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பான் கார்டு
உருவாக்க தாய், தந்தை
இருவரிடமும் இருப்பிடச் சான்றிதழ், அடையாள அட்டை,
பெற்றோரின் ஆதார் அட்டை,
ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்.
இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
பான் கார்டுக்கு விண்ணப்பிக்க, நீங்கள் NSDL
இன் அதிகாரப்பூர்வ
இணையதளத்தைப் பார்க்க வேண்டும். பின்னர் குழந்தைகள் அல்லது சிறார்கள்
விண்ணப்பத்திற்கான பிரிவில் உள்ள விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது தேவையான அனைத்து தகவல்களையும் நிரப்பவும். மேலும், குழந்தைகளின் வயது தொடர்பான தகவல்கள் மற்றும்
ஆவணங்களின் நகல்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். படிவத்தை பூர்த்தி செய்யும்
போது, பெற்றோர் இருவரும் தங்கள்
சொந்த புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும்
டிஜிட்டல் கையொப்பத்தை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
இந்த செயல்முறைக்குப் பிறகு நீங்கள் பான் கார்டுக்கு ரூ.107 ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை
இப்போது சமர்ப்பிக்கவும். சிறிது நேரம் கழித்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு பான்
கார்டு விண்ணப்பம் குறித்த தகவல் அடங்கிய செய்தி அனுப்பப்படும்.
இந்த செய்தியில் உறுதிப்படுத்தல் எண் இருக்கும். இதனைத் தொடர்ந்து சரிபார்ப்பு
நடத்தப்படும். சரிபார்த்த 15 நாள்களுக்குப்
பிறகு, உங்கள் முகவரிக்கு பான்
கார்டு அனுப்பப்படும். இந்த செயல்முறையைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் குழந்தையின்
பான் கார்டை எளிதாக உருவாக்கலாம். கூடுதல் தகவலுக்கு https://www.onlineservices.nsdl.com/
என்ற இணையதளத்தைப்
பார்க்கவும்.