மக்களுக்கு பான் கார்டு தொலைந்து விட்டால், மீண்டும் எப்படி பான் கார்டை பெறுவது? எங்கு செல்ல வேண்டும்? யாரிடம் பெற வேண்டும்? என்ற குழப்பம் உள்ளது.
நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு (PAN Card) இன்று மிக
முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். நிதிச் சேவைகளைப் பெறுவது முதல் வருமான வரி
கணக்கு (ITR) தாக்கல் செய்வது வரை அனைத்திலும் பான் அட்டைகள்
பயன்படுத்தப்படுகின்றன.
கவலையை விடுங்கள், பான் கார்டை தொலைந்து விட்டால், மின்னணு பான் கார்டு அல்லது இ-பான் (e-PAN) அட்டையை
பதிவிறக்கம் செய்யலாம். இந்த பான் கார்டு பிடிஎப்-ஐ திறக்க உங்களின் பிறந்த நாளை
தேதி, மாதம், வருடம் (ddmmyyyy) என்ற வகையில் உள்ளிட வேண்டும். இல்லை கையில்
தான் பான் கார்டு வேண்டும் என்றால்,
ரீபிரிண்டட் பான் கார்டை
நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) வழங்குகிறது.
சில எளிய வழிமுறைகளை பின்பற்றி என்.எஸ்.டி.எல் தளத்தில் பான் கார்டு
ரீபிரிண்டட் வெர்ஷனை நீங்கள் அஞ்சல் மூலம் பெற முடியும்.
ரீபிரிண்டட் பான் கார்டு பெறுவது எப்படி?
முதலில் பிரவுசரை திறக்கவும்
அதில் https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html
என்ற இணைப்பிற்குள்
செல்லவும்
அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை பூர்த்தி செய்து, ரீபிரிண்டட் பான் அட்டைக்கு பதிவு செய்யவும்
நிரந்தர முகவரிக்கு அஞ்சல் மூலமாக உங்களுக்கு பான் கார்டு அனுப்பப்படும்.
ஆன்லைன் மூலமாக நீங்களே பான் கார்டு பெறுவது எப்படி?
வங்கி, வருமான வரி தொடர்பான பல்வேறு முக்கியமான வேலைகளுக்கு பான் கார்டு அவசியம். சில சமயங்களில் இந்த முக்கியமான ஆவணம் நமது அலட்சியம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் தொலைந்து போய்விடும். பான் கார்டு தொலைந்துவிட்டால், நமக்கு நிறைய பிரச்சனை ஏற்படும்.
பான் கார்டு தொலைந்துவிட்டால் அதை எப்படி மீண்டும் பெறுவது என்று பலருக்குத் தெரியாது. அதற்கு நீங்கள் எங்கும் அலையத் தேவையில்லை. செலவும் அதிகமாக ஆகாது. இப்படி செய்தால் போதும்...
முதலில் கூகுளில் pan card reprint என டைப் செய்யவும்.
https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html என்ற வெப்சைட் முதலில் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.
உள்ளே சென்றதும் உங்களுடைய பான் நம்பர், ஆதார் நம்பர், பிறந்த தேதி ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
நீங்கள் ஜிஎஸ்டிஎன் எண்ணை அங்கே விட்டுவிடலாம். கடைசியாக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். (அந்த பாக்ஸில் டிக் செய்யவும்)
கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு ’submit' என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் முன் ஒரு புதிய பக்கம் திறக்கும். உங்கள் எல்லா தகவல்களும் அந்தப் பக்கத்தில் இருக்கும்.
உங்கள் புதிய பான் கார்டை எங்கு அனுப்புவது என்பதைக் குறிக்க, உங்கள் முகவரியை இங்கே உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
முகவரி சரிபார்ப்புக்குப் பிறகு OTP பெற வேண்டும். அதிகாரப்பூர்வ தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் மூலம் OTP அனுப்பப்படும்.
இப்போது generate OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். உடனே மொபைல் நம்பருக்கு OTP வரும்.
OTPயை உள்ளிட்ட பிறகு, நீங்கள் 50 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, யுபிஐ என பல ஆப்சன்கள் உள்ளன.
பணம் செலுத்திய பிறகு, நீங்கள் PAN இணையதளத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். இங்கே நீங்கள் ’continue' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
இங்கே நீங்கள் Generate and Print என்பதை கிளிக் செய்தால் ரசீது உருவாக்கப்படும். நீங்கள் விரும்பினால், அதை பிரிண்ட் எடுக்கலாம்; அல்லது உங்கள் மொபைல் போனில் சேமிக்கலாம்.